Sunday, March 20, 2011

தொலைந்துபோன என் காதல்....

பார்த்து சிரித்தாள்..... 
மனதை களவாடி கனவுலகில் 
தொலைய வைத்தாள்... 
ஆனால்.. காலையில் 
கரைந்துபோகும்  கனவுகளை போல
தொலைந்துபோனாள்...
நான் மட்டும் வெறுமையாய்..












 -கிறுக்கன்...

Friday, March 18, 2011

எங்கே...?

என் இதய வாசலை திறந்த 
அவள்... எங்கே...? 
கனவுகளோடும்..... சிரிப்புகளோடும் ... 
என்னோடு கலந்திருந்த 
அவள்... எங்கே...?  
எனதருமை தோழமைகளே..  
என் இதய வாசலில் மரித்துப்போன 
அவளை எங்காவது கண்டால் 
சொல்லியனுப்புங்கள்.... 
இன்னும் நான் உயிரோடு இருப்பதாய்..... 
-கிறுக்கன்...

Friday, March 4, 2011

நிலையாக..

சட்டென புகுந்தாய்.. 
சிட்டென பறந்தாய்.. 
உன் நினைவுகள் மட்டும் 
என் நெஞ்சில்.. 
நிலையாக.. 
-கிறுக்கன்...

உறவு...

கிறுக்கனாய்.... நான்..
 கவிதையாய்.. நீ.. 
பிரிந்துவிட்ட தண்டவாளமாய் 
தொடர்கிறது 
நம் உறவு... 
இதோ... என்னவளின்றி..
தொடர்கிறது... என் கனவுகளின் பயணம்...
-கிறுக்கன்...