Saturday, November 1, 2014

வீண் வதந்தி வேண்டாமே...

வீண் வதந்தி வேண்டாமே...
250 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சூரியப் புயல் வீசப்போகிறது, இதனால் வரும் 16 ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு மிகப்பெரிய தூசிப் படலம் பூமியை சூழப் போவதாகவும் இதன் காரணமாக தொடர்ந்து இருள் ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களிலும், சில இணைய தளங்களிலும் செய்தி பரவி வருகிறது.
ஆனால் இது போன்ற நிகழ்வு நடைபெறவிருப்பதாக பரவிவரும் தகவல் முழுக்க முழுக்கப் பொய்...
சூரியனில் இருந்து வரும் கதிர்களும், சூரியப் புயலும் பூமியை நொடிக்கு நொடி கடந்து சென்றுகொண்டுதான் இருக்கின்றன, அதிலிருந்து நமது வளி மண்டலம் ஒரு போர்வை போல செயல்பட்டு நம்மை பாதுகாத்து வருகிறது. அதேபோல் 250 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சூரியப் புயலும் தற்போது நம்மை தாக்கவில்லை.
மேலும், தொடர்ந்து 6 நாட்களுக்கு இரவு ஏற்படும் என்ற செய்தியை நாசா உறுதி செய்ததாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் நாசா அந்த செய்தி வதந்தி என்று மட்டுமே விளக்கம் அளித்துள்ளது..
ஆனால் வலைத்தளங்களிலும், வாட்ஸ் அப் பிலும், ஒரு மாலை இரண்டு தமிழ் நாளிதழ்களிலும் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தோழமைகளே.. ஒரு தகவல் கிடைத்தால் அது உண்மையா.. பொய்யா என்பதை உறுதிப்படுத்திவிட்டு பகிருங்கள் வீண் வதந்தி வேண்டாமே...
- கிறுக்கன்...
L