45°C அளவிற்கு இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்திருப்பது ஏதோ தற்காலிகமானது.... தற்செயல்... என்றால் நம்மை விட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது... ஆம்
'புவி வெப்பமயமாவது அதிகரித்து வருவதால் 2100ல் வெப்ப அலை காரணமாக இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் மக்கள் உயிர் வாழ்வது கடினம்' என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லயோலா மேரிமவுன்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, ஜெரமி பால், எம்.ஐ.டி.,யின், எல்பாதிக் எல்டாஹிர், ஹாங்காங் பல்கலை பேராசிரியர் யுன் சுன் இம் ஆகியோர் இணைந்து நடத்திய பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில்
வெப்ப அலைகள் மற்றும் உயர் ஈரப்பத நிலைகள், 80 ஆண்டுகளில் அதிகரிக்கும். இந்தியா - கங்கை நதிப் படுகைகளில் அதிகம் வசிக்கும் விவசாய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்தியாவின் பெரும்பகுதி, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வசிப்பவர்கள் இந்த நுாற்றாண்டின் இறுதிக்குள் வெப்ப அலையை சந்திக்க நேரிடும்.
இந்தியா, தெற்காசிய மண்டலத்தில் வசிப்பவர்கள் 2100ல் அபாயகரமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை உணரும் சூழல் பெருகிவருகிறது. இது இயற்கையின் மாற்றம் அல்ல... மனித தவறுகளால் ஏற்பட்டு வரும் அழிவின் அறிகுறி...
-கிறுக்கன்...
Sunday, August 6, 2017
அழிவின் விளிம்பில் மனித இனம்
Subscribe to:
Posts (Atom)